சிதம்பரம் இரவிச்சந்திரன்
ஆபத்தான வைரஸ்கள் நன்னீரில் நுண் பிளாஸ் டிக்குகளைப் பற்றிக்கொண்டு வாழ்கின்றன என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. மனித குடலுக்குள் உள்ள ரோட்டா வைரஸ் (rotavirus) போன்றவை நுண் பிளாஸ்டிக்குகளில் ஒட்டிக்கொண்டு மூன்று நாட்கள் வரை தொற்றை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலைப் பெற் றுள்ளன. மனித உடலுக்குள் வாழும் ரோட்டா போன்ற வைரஸ்கள் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, போன்ற கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைந்த நீளமுடைய இவை, இதனால் நோய் பரப்பும் திறனை அதிகமாகப் பெறுகின்றன என்று ஸ்டெர்லிங் (Stirling) பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நுண் பிளாஸ்டிக்கு கள் மீது ஒட்டிக்கொள்ளும் இந்நுண்னுயிரிகளின் திறன் இவற்றின் நோய் பரப்பும் ஆற்றலை நீட்டிப்பது மோசமான ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியர் மற்றும் ஸ்டெர்லிங் பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் ரிச்சர்ட் க்யுலியம் (Prof Richard Quilliam) கூறுகிறார். நுண்ணுயிரிகள் நீக்கப்பட்ட நிலையில் இதே போன்ற ஆய்வுகள் முன்பு நடத்தப்பட்டன. என்றாலும் வைரஸ்கள் சூழலில் எவ்வாறு நடந்துகொள்கின்றன என்பது குறித்து நடந்த முதல் ஆய்வுகள் இவையே. நீரில் நுண் பிளாஸ்டிக்குகளில் காணப்படும் வைரஸ்கள் நோயுண்டாக் கும் திறன் பெற்றவையா என்பது பற்றி வழமையான நிலைப் படுத்தப்பட்ட ஆய்வக நடைமுறைகளைப் (standard labrotory methods) பயன்படுத்தியே நடத்தப்பட்டன.
சூழலில் உள்ள பொருட்களில் வைரஸ்கள் காணப்படு கின்றன என்றாலும் நுண் பிளாஸ்டிக்குகளிலும் அவை ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன என்று கண்டறியப்படுவது இதுவே முதல்முறை. பிளாஸ்டிக்குகள் எவ்வாறு வைரஸ்கள், பாக்டீரியாக் களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நோக்க மாகக் கொண்டு இந்த ஆய்வுகள் 1.8 மில்லியன் பவுண்டு செலவில் நடந்துவரும் இயற்கைச் சூழல் ஆய்வுக் கவுன்சில் (Natural Environment Research Counsil) திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் நுண் பிளாஸ்டிக்குகள் சூழலில் நோயுண்டாக்கும் கிருமி களிலும் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கழிவுநீரில் இருந்து கடற்கரை நோக்கி சூழல் மாசு (Environmental Pollution) என்ற ஆய் விதழில் வெளிவந்துள்ள இந்த ஆய்வுக்கட்டுரை மூன்று நாட்கள் நோயுண்டாக்கும் திறனுடன் வைரஸ்கள் இருப்பது வருங்காலத்தில் வைரஸ் நோய்கள் உலகில் கட்டுக்கடங்காமல் பெருகக் காரணமாகும் என்று அச்சம் தெரிவித்துள்ளது. இவை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்களில் இருந்தும் கூட அதே பண்புடன் கடற்கரை வரை பயணம் செய்யும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் நுண் பிளாஸ்டிக்கு களை வடிகட்டுவதில்லை. அனைத்துத் திறன்களுடன் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டாலும் வெளிவரும் சுத்திகரிக்கப்பட்ட நீர் நுண் பிளாஸ்டிக்குகளைக் கொண் டிருக்கும். நுண் துகள்களுடன் பயணிக்கும் வைரஸ்கள் நதிகளில் கலந்து கழிமுகத்துவாரப் பகுதிக்கு சென்று இறுதியில் கடற்கரையை அடைகின்றன. மிக நுண்ணிய இவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியாது. இவை நீரின் வழியாக நீந்துபவர்கள் உடலுக் குள் செல்ல வாய்ப்புண்டு. சில சமயங்களில் இவை கண் கவர் நிறங்களுடன் சிறிய பருப்பு வடிவத்தில் கடற்கரை மணலில் காணப்படுகின்றன. நர்டில்ஸ் (nurdles) என்று அழைக்கப்படும் இவற்றை குழந்தைகள் தின்பண்டம் என்று கருதி வாயில் போட்டுக்கொள்ளும் அபாயமும் உள்ளது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வகை பிளாஸ்டிக்குகள் மனித செல்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி இன்னமும் தெளிவாக ஆராயப்படாத நிலையில் இக்கண்டுபிடிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
எல்லா வைரஸ்களும் நோயை உண்டாக்குவதில்லை. என்றாலும் சில துண்டு நுண் பிளாஸ்டிக்குகள் மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களால் காலனித்துவப்படுத்தப் பட்டால் அது மனிதகுல ஆரோக்கியத்திற்கு பெரும் பிரச்சனையாக மாறும்ம். ப்ளூ வைரஸ் போன்ற புரத உறையுடன் (lipid coat) கூடியவை மற்றும் மனித உடலில் பொதுவாகக் காணப்படும் ரோட்டா வைரஸ் மற்றும் நோரோ வைரஸ் (noro virus) போன்ற உறையற்ற வைரஸ்களில் விஞ்ஞா னிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். உறையுள்ள வற்றில் உறை விரைவாக கரைந்து வைரஸ்கள் மடிகின் றன. உறையற்றவற்றில் வைரஸ்கள் நுண் பிளாஸ்டிக்கு கள் மீது உடனடியாக நன்கு ஒட்டிக்கொள்கின்றன. சுற்றுப்புறச்சூழலில் காணப்படும் இயற்கைப் பொருட்கள் மீது வைரஸ்கள் ஒட்டிக்கொள்ளும் இயல்பு டையவை என்றாலும் பிளாஸ்டிக்குகள் மீது அவை ஒட்டும்போது அவற்றின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. விஞ்ஞானிகள் இந்த நுண்ணுயிரிகளை மூன்று நாட்கள் ஆராய்ந்தனர். வரும் நாட்களில் அவை மேலும் எவ்வளவு நாட்கள் தொற்று உண்டாக்கும் திறனுடன் உள்ளன என்பது பற்றி ஆராயத் திட்டமிட்டுள்ளனர். மனித மலக்குடலில் நுண் பிளாஸ்டிக்குகள் இதே ஆய்வுக்குழுவினர் 2022 மே மாதத்தில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் கடற்கரையில் ஒதுங்கிய மணலில் மனித மலக்குடலில் காணப்படும் பாக்டீரியாக்களில் நுண் பிளாஸ்டிக்குகள் கலந்திருப்பதைக் கண்டறிந்தனர். இது மனிதர்களின் உடல் நலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 2019இல் ஸ்காட்லாந்து கடற்கரைகளில் கழிவுகளில் காணப்படும் பாக்டீரியாக்கள் பிளாஸ்டிக் உருண்டை களில் ஒட்டிக் கொண்டிருப்பதை இதே ஆய்வுக்குழு முதல்முறையாகக் கண்டுபிடித்தது. துருவங்கள் முதல் வளி மண்டலம் வரை, ஆழ்கடல் முதல் எவரெஸ்ட் வரை பூமியின் மூலை முடுக்குகள் எங்கும் நுண் பிளாஸ்டிக்கு கள் நம்மை ஆளும்போது இவற்றின் விவேகமற்ற பயன்பாட்டை உடனடியாக மனிதன் நிறுத்தாவிட்டால் நாளை அவனை அழிக்கும் பேராயுதமாக இவை மாறிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.